கொழும்பு மெனிங் சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குழப்ப நிலை!

0 21

புறக்கோட்டை மெனிங் சந்தையில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெனிங் சந்தையில் மரக்கறி விற்பனை செய்வதற்காக வந்த போது சந்தை மூடப்பட்டிருந்துள்ளது. இதனால் வர்த்தகர்கள் சிக்கலான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் மெனிங் சந்தை திறக்கப்படும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய வர்த்தகர்கள் சிலர் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். எப்படியிருப்பினும் பொலிஸார், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்காமையினால் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில வர்த்தகர்கள் தங்கள் மரக்கறிகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் சிலர் பிரதான வீதியில் பல்வேறு இடங்களில் மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.