டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்…

0 316

டெல்லியில் நடைபெற்ற உளவியந்திர பேரணி வன்முறைக்கு பின்னர் 100 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26ம் திகதி மாபெரும் உளவியந்திர பேரணி ஒன்றினை நடத்தினர்.

இந்த பேரணியால் வன்முறை ஏற்ப்பட்டு பேரணி கைவிடப்பட்டது.

எனினும் பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இது குறித்து ஆய்வு செய்ய 6 பேரை கொண்ட குழு ஒன்றை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

இந்த குழுவினர் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.