நடைபெறவுள்ள தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்தின் மனைவி..

0 244

அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடந்து கருத்து வெளியிட்ட பிரேமலதா.

ஒரு பெண்ணாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவு என்று கூறினேன்

இது அதிமுகவுக்கு எதிரான நிலையா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.

234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளையும் தேமுதிக ஆரம்பித்துள்ளது..

தேர்தலுக்கு தயாராகி விட்டோம். இந்த முறை மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளமையினால், காலதாமதம் செய்யாமல் தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் உடனடியாகப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

அத்துடன் தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டியிடுவேன். சட்டப்பேரவையில் என் குரல் நிச்சயம் ஒலிக்கும் எனவும் அவர் சுட்டி காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.