P2P போராட்டம் – பொலிஸாரின் வேட்டை ஆரம்பம் – யாழ் இளைஞன் கைது.

0 307

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சி பேரணியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் யாழ், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடகிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பேரணியின் போது இளைஞன் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து பொலிஸார் இன்று மதியம் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.