யாழ். மாநகர சபை முதல்வருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

0 257

யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் சுகாதாரத் துறையினரை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நீதிமன்றங்களில் அவருடன் தொடர்பை பேணிய பலர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த 16ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்பைப் பேணியவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியுடன் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தம்மை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் முதல்வருக்கு தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.