பாலாவை கொலை செய்து விடுவேன்- கடும் கோபத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை…!

0 29

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவரின் மனதை கவர்ந்தவராக இருந்தவர் பாலாஜி முருகதாஸ்.

பின் நாட்கள் செல்ல செல்ல அவருடைய பேச்சு, மற்றவர்களிடம் நடந்துகொள்வது எல்லாம் வித்தியாசமாக மாற ஆரம்பித்தது.

இதனால் சில போட்டியாளர்கள் அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தனர். இந்த நிலையில் அவர் சனம் பற்றி சில சர்ச்சையான விஷயம் கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. தொலைக்காட்சியும் அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு பேட்டியில், சனம் அதிகம் கோபப்படுகிறார் என நினைத்தேன், ஆனால் அவரது கோபத்திற்கு பின் இருக்கும் உண்மையை நான் உணர்கிறேன். பாலாவும் ஒரு மாடலாக இருந்துகொண்டு இப்படி பேசுவது நியாயம் இல்லை.

அவர் பொய் கூற மாட்டாரா என்ன, தனது அம்மா விஷயத்தில் பொய் கூறியுள்ளார். என்னிடம் அவர் அப்படி கூறியிருந்தால் நான் அவரை கொலை செய்திருப்பேன் என கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.