யாழ் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று..

0 314

யாழ் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் 396 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகளின் படியே இவ்வாறு 16 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்.

யாழ் சிறைச்சாலையில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்.

ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கைதடியைச் சேர்ந்தவர்.

அத்துடன் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.