யாழில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி..

0 243

யாழ் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் யாழ் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து 117 பேர் இன்று முற்பகல் வரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்ட 541 மாதிரிகளின் அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றது.

குறித்த அறிக்கையிலேயே 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.