சுமார் ஒரு கோடி ரூபா ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 273

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் இடம்பெற்ற சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள்; கைது செய்யப்பட்டனர்.

மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.