தந்தை செல்வாவின் 123 வது ஜனன தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு!

0 452

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 123வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பின்னர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான அ.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர் இ.ஆனால்ட் மற்றும் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.