விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பாட்டில் – அமெரிக்கா அறிவிப்பு.

0 250

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையினை அமெரிக்கா நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டியே தமிழீழ விடுதலைப்புலிகள் தமது செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம்; ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்ததுள்ள போதும் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனினும் 2009 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாடின்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் இதுவரை பதிவாகவில்லை எனவும் எனவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.