இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட பல லட்சம் பெறுமதியை தங்கம்…

0 77

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லச்சம் பெறுமதியான 9 கிலோ எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று (11) அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரை காவல்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் குறித்த நபர் மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த அமீன் என்பவர் என தெரியவந்த்துள்ளதுடன் சந்தேகநபர் தம்வசம் வைத்திருந்த 9 கிலோ தங்கத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி சம்பவத்துடன் தொடர்புடைய அமீன் மற்றும் அவரின் சகாக்கள் உள்ளிட்ட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நாட்டுப்படகு ஒன்றினையும் தூத்துக்குடி கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் விசாரணைகளும் முன்னறிக்கப்பட்டுள்ளது…

Leave A Reply

Your email address will not be published.