நாடாளுமன்றில் அமளிதுமளி-சபை நடவடிக்ககைகள் ஒத்திவைப்பு…

0 422

தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சபை நடவே இந் ஆர்ப்பாட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் வேண்டுமென கூச்சலிட்டவாறு தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே தேர்தலை நடத்து என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் தமது சபையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததையடுத்து, சபாநாயகரால் சபை நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.